No title

 



சுவிற்சர்லாந்தில் கணவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்கெவ் பகுதியிலுள்ள ரப்பர்ஸ்விஸ் பகுதியில் கடந்த புதன்கிழமை காலையில் இந்த கொலை சம்பவம் நடந்தது பெர்னர்ஸ் எஸ்வெர்க் என்ற சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றும் தமிழ்பெண், காலை 8.30 மணியளவில் கொல்லப்பட்டார். 


சிற்றுண்டிச்சாலைக்குள் கணவர் கத்தியுடன் நுழைந்து மனைவியை சரமாரியாக குத்திக் கொன்றார்.இந்த கொலை நடந்த போது, அந்த பகுதியில் சிலர் நின்றிருந்தனர்.

சம்பவ இடத்திலேயே அந்த பெண் சுருண்டு விழுந்து இறந்தார். பொலிசார் அங்கு வந்த போது, சந்தேகநபரான கணவர் எந்தவிதஎதிர்ப்புமின்றி காவல்துறையினரிடம் சரணடைந்தார்.




யாழ்ப்பாணத்தை சேர்ந்த கருணாகரன் நிர்மலா (47) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே இந்தநிலமைக்கு ஆளானவர் ஆவார்

யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட குறித்த பெண் கடந்த 25 வருடங்களாக குடும்பத்துடன் சுவிற்சர்லாந்தில் வசித்து வருகின்றார்.

கணவன், மனைவிக்கிடையில் அண்மைக்காலமாக தொடர்ந்து ஏற்பட்ட முரண்பாடு தீர்க்கப்படாமல் இந்த விபரீதத்தில் முடிந்துள்ளது.

ஈழத்தமிழர்க்கு அவர்தம்தலைவிதியை மாற்றிவைக்க

ஒருவன் தீர்ப்பெழுதினான் . அதுவே அடுத்தவீட்டு அயலவர்களை,ஏன்தம்படலையைத்தாண்டாதவர்களைக்கூட.., தமதுகிராமம் கடந்து வேற்று கிராமங்களை நகரங்களையே அறியாத நாகரீகம் புரியாத பல இலட்சம் ஈழத்தமிழ் குடும்பங்களை பஸ்ஏறி ரயிலேறி விமானமேறி எல்லைகளை களவாகத்தாண்டி ஓடி ஒளிந்தவர்களை எல்லாம்  பூமிப்பந்தின் வளர்முக நாடுகளில் எல்லாம் தூக்கிவீசியது..! அதில் நாம் அதிர்ஷ்டகரமாக சொர்ணபூமி என ஐரோப்பிய மண்ணில் திகழும் சுவிஸ் நாட்டில் வந்து விழுந்தோம் சொகுசாக வாழக்கிடைத்து வாழ்கிறோம் !


எமது புலம்பெயர்வு வாழ்வானது எதனடிப்படையில் இந்த நாடுகளால் மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை நாம் புரிந்துகொண்டோமா? எங்கள் சொந்தமண்ணில் உயிர்வாழ உத்தரவாதம் இல்லை ; பாதுகாப்பில்லை..! எனவே எங்களுக்கு உயிர்பிழைத்து வாழ எங்களுக்கு ஒரு வாய்ப்பளியுங்கள்..!உங்கள் மண்ணில் சட்டதிட்டங்களை மதித்து எதிலியாக வாழ வாழ்வுப்பிச்சை அளியுங்கள் ,உங்களை மன்றாடிக்கேட்கிறோம் என்று அகதித்தஞ்சம் கோரியவர்கள் நாம் . 


இந்த நாடோ இனத்தால் மதத்தில் மொழியால் நிறத்தால் பண்பாட்டு நாகரீகத்தால்  பழக்கவழக்கத்தால் முற்றிலும் எதிரான நிலை கொண்டிருந்த எம்மை எங்களது எந்தவித அத்தாட்சிப்பத்திரமோ ..! எந்தவித அடையாளச் சான்று 1 கூட இல்லதாத நிலையில்கூட  வாயால் சொல்லும் சொல்லைநம்பி எமது பெயர், முகவரி , வயது , தொழில் , பிறந்தநாடு,  மொழி, மதம் , அரசியல் பிரச்சனை அத்தனையையும் நம்பி பதிவு செய்துகொண்டு நமக்கு பாதுகாப்பு அளித்தது இந்த தேசம். 


எமது புகைப்படத்தை ஒட்டி தமது நாட்டின் வதிவிட விசாவை தந்து  படிப்படியாக எம்மையும் தம்மைப்போல் ஓர் மனிதராக மதித்து வேலைவாய்ப்பு, சம்பளம் , நாமும் பிள்ளைகள் கற்க்க கல்விவசதி, மருத்துவக்காப்புறுதி, இருப்பிடம் , உடைகள் , பாத்திரங்கள் ,உணவுப்பண்டங்கள்  கைச்செலவுக்கு காசு எனத்தந்து எம்மைத் தமது மக்களைக் காட்டிலும் உபசரித்து வரவேற்ற மாண்பு இந்த ஐரோப்பிய , அமெரிக்க , அவுஸ்ரேலியக் கண்டங்களில் உள்ள  நாடுகளில்  இருக்கின்றது அவற்றை வார்த்தையில் சொல்லிமாளாது! 


ஆனால் ஐரோப்பிய நாடுகளில் சுவிஸ் நாடு ஒரு பாதுகாப்பு மிகுந்த சுதந்திரமான ,பண்புமிக்க மக்களால் மக்களின் ஆணைபெற்று சட்டங்களை உருவாக்கும் தேசம்ஆகும் . வாக்களிப்பதில் இருந்து எமது தமிழ்மொழி கலாச்சாரம் பண்பாடு அத்தனையையும் வளர்ப்பதற்கு தடைபோடாது ஆதரவு தந்து பல்லின பல்கலாச்சார மக்களையும் மதிப்பளிக்கும் தேசத்தில்  பிரஜாவுரிமைபெற்றோம் , நல்ல வேலை வாய்ப்புக்களைப்பெற்றோம் , விலையுயர்ந்த மகிழுந்துகளில் பயணித்தோம் , சொந்தமாக இந்த நாட்டில் வீடு வாங்கினோம் , இந்த தேசத்து மொழிதெரியாமலே நிரந்தர வதிவிடவுரிமையை பெற்றோம் , வியாபாரங்களில் சிறந்துவிளங்கினோம் , கலைநிகழ்ச்சிகள் செய்தோம் , கோவில்கள் கட்டினோம் , அங்கு பூசைகளைவிட பூசல்களால் சண்டையிட்டோம் எங்கள் பிணக்குகள் தீர்க்க காவல்துறையும் நீதித்துறையும் தலையை பிய்த்தபடி காத்திருந்து கடமைசெய்தனர் இதி்ல் அவர்களின் பொறுமை கடலினும் பெரிது. 


இந்த நாட்டிலேயே பேரூந்துகள் தனித் தொடருந்துகளை (ரயில்களை)வாடகைக்கமர்த்தி புலிக்கொடி கட்டி பல மாநிலங்கள் கடந்து பயணித்து ஜெனீவாவரை போனோம் . இறுதி யுத்தகாலத்தில் சட்டங்களை மதிக்காது வீதிகளை மறித்தோம்  தொடரூந்து நிலையங்களை மறியல்செய்தோம் !  பாராளுமன்றம் & அரசநிறுவனங்கள்முன் ஆர்ப்பாட்டம் நடத்தினோம் ; கற்களை வீசினோம் , அவசர ஊர்திகள்கூட கடந்துசெல்லவிடாது தடுத்தாட்கொண்டோம் . கறுப்புயூலை, மே1 , மே18 ,மாவீரர்தினம் , ஜெனீவாபேரணி , அடிக்கடி ஆர்ப்பாட்டம் , மாவீரர் உதைபந்தாட்டம் , உள்ளரங்கு வெளியரங்கு விளையாட்டுப்போட்டிகள்  குழுச்சண்டைகள் , வாள்வெட்டு துப்பாக்கிச்சூடு கோஷ்டிமோதல் , திருட்டு  சீட்டு வட்டி , கடன்பணமோசடி என எத்தனை அட்டகாசங்களை நிகழ்த்தினோம் ! 


இருந்தும் எம்மை அடித்து துரத்தாமல் மனிதாபிமானம் என்றால் என்ன என்பதின் ஆழ்மனதில் இருந்து கருணையோடு உணர்வுகளுக்கு மதிப்பளித்து எம்மை உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கும் இந்தநாடு எம்மை பெற்றெடுத்த நாட்டைவிட உயர்வானது . அதை உயிரிலும் மேலாகநேசிப்பதே / கும்பிடுவதேதகும் .  ஏன் உயிரைக்கூடத் தரலாம் .ஆனால் நாம் ..! வேலையிடங்களில் இந்த நாட்டவர்வர்களை மதிப்பின்றிப்பேசுவது ! கைவிரல் அடித்துக்காட்டுவது சுவிஸ் பண்டி என்பது ! அவர்கள் மொழியில் பெட்டை நாய் என்பது , ஊத்தை நாய்என்பது இன்னும் சொல்லமுடியாத கெட்டவார்த்தைகளின் அர்த்தம் தெரியாமல் பேசுவது ! அவர்களைப்பற்றி அவர்களின் இனத்தவரிடமே போட்டுக்கொடுப்பது ! கோபப்படுவது , ஆக்ரோசமாக இலக்கண சுத்தமின்றி அவர்கள் மொழியென நினைத்து அவர்களேபுரியாதநிலையில் ரென்சனாவது(படபடப்பாக) இன்னும் எத்தனையோ இழிசெயல்கள் உண்டு ..!


இவையெல்லாம் இந்தமண்ணில் வாழ்வுப்பிச்சைகேட்டுவந்த எமக்குத்தகுமா?

இந்த நாட்டிற்கு வருவதற்கு முன் சாதியரீதியிலும் , பிரதேச ரீதியிலும் , குடும்பரீதியிலும் நாம் வேறுபட்டே சொந்தமண்ணில் வாழ்ந்தோம் மலையக மக்களை அடிமைகளாக எமது மண்ணிலேயே வேலைக்கமர்த்தி  சம்பளம்தராது மிகக்கேவலமாக நடாத்தினோம் . நலிந்தவனை வலிந்தவன் இருத்தி எழுப்பினோம் . கூழைக்கும்பிடு போடவைத்தோம் . தாழ்த்தப்பட்டவன் என்போனுக்கு சிரட்டையில் தண்ணீரும் ஓலைத்தட்டுவத்தில் சோறும் கொடுத்தோம் !

 சொந்த மண்ணில் இனரீதியாக நாமே மொத்தமாக ஒடுக்கப்பட்டோம் .


பொருளாதார அகதியோ ,அரசியல் சூழ்நிலை அகதியோ 4x1=4 என நான்காம் வாய்ப்பாடு தெரியாதவர்கூட விமானமேறிவந்தோம்  வந்த இடத்தில் விரும்பத்தகாத செயல்கள் ஒன்றா இரண்டா பட்டியலிட..! இன்று எமது குழந்தைகள் நல்ல உயர்கல்வி கற்று சுவிஸ் மக்களுக்கே பாடம் நடத்தும் அளவுக்கு இந்த நாட்டவர்களாக பெருமையோடு வலம் வருகிறார்கள் . கடந்தசில ஆண்டுகளுக்குமுன்  பல்கலைக்கழகம் ஒன்று ஆராட்சி செய்ததில் இன்னும் சிலஆண்டுகளில் சுவிஸ் நாட்டின் மிக முக்கிய வேலைகளில் 40 % வெளிநாட்டவரே வகிப்பர் அதில் முதலிடத்தில் தமிழர்கள் இருப்பார்கள் என்று அறிக்கை சமர்ப்பித்தது .எந்தத் தொழில் செய்தாலும் ஏற்றத்தாழ்வு பார்க்காத இந்த சுவிஸ் மக்கள் மற்றவர் தோள்மீது கைபோட்டு உறவைப் பேணுவர் .  


பணக்காரன் ஏழை என்ற பாகுபாடோ அரசியல் தலைவர் என்பதற்காக பாதுகாப்போடோ திரியமாட்டார்கள் !நாடாளும் மந்திரிகளும் சாதாரண பேரூந்தில் சிற்றுந்தில் , தொடரூந்தில் மக்களோடு மக்களாக அருகமர்ந்து பயணிப்பர் . உட்கார இடமில்லாவிட்டால் நின்றபடியே பயணிப்பர் . யாரும் அவருக்கு ஸ் பெசலாக மரியாதை கொடுத்து செம்பு தூக்கமாட்டார்கள் .

நேரம்தவறாமையும் , அறியாதவர்க்கும் வணக்கம்சொல்லும் பண்பும் இவர்கள் மானுடத்தை நேசிப்பதில் தெளிவாக அறியலாம் . 


இந்த தேசத்தில் நாம் அண்டிப்பிளைக்க வந்தோம்  ஒருவரை ஒருவர் பழிவாங்குவதாக நினைத்து தம் வாழ்வை அழிப்பதோடு மற்றவர் வாழ்வை அழிப்பதை அறிவார்ந்து சிந்தித்து தடைசெய்வோம் . ஒரு உயிரைக்கொல்லும் உரிமை இன்னோர் உயிருக்கில்லை..!  அதுவும் அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்ற ஔவையின் வார்த்தையை உணர்ந்து மானுடதர்மத்தை மனதிற்கொண்டு கொலைவெறி தவிர்ப்போம் ! உயி்ர் பாதுகாப்புத்தேடி அடைக்கலம் வந்த நாடுகளில் நாமே எம் கோரமுகம் காட்டுதல் தகுமோ? 

இதிலிருந்து விடுதலைபெற சைக்காலாஜி டாக்டர் ( மனநலமருத்துவர்)ஆலோசனை பெறுவோம் 


ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம் என்பர் ! அதுபோல் இந்த நாட்டில் அனைவருக்கும் சுதந்திரமுண்டு ! ஒருவரை ஒருவர் பிடிக்காவிட்டால் விட்டிற்று விலத்தி தனியாக வாழுங்கள் அல்லது வேறுவாழ்க்கையை தேடிக்கொள்ளுங்கள் . ஒரு பெண்ணின் தவறுக்கு ஒரு ஆண் காரணமாகிறான் . ஒரு ஆணின் தவறுக்கு இன்னொரு பெண் காரணமாகிறாள். எனவே தவறுகளை ஆணோ பெண்ணோ தம்மில் இருந்து திருத்திக்கொள்தல் வேண்டும் , இல்லை பிரிந்து சென்று வாழ்தல் நன்று!

 இந்த உலகில் ஒரு ஆணுக்கும் பெண்ணும் பெண்ணுக்கு ஆணுமே பாலியல் வடிகால் ஆகும் 

பல குடும்பங்களில் குடும்ப கௌரவத்திற்காக சகிப்புத்தன்மையோடு ஆணோ பெண்ணோ மௌனமாக உள்ளுக்குள் அழுதபடிகடந்துபோகின்றனர் அதனால் குடும்ப பந்தங்கள் நிலைத்திருக்கின்றன! எல்லா இடங்களிலும் இதை எதிர்பார்க்க முடியாது!


குடும்ப பிரச்சனைகளுக்கு பிள்ளைகள் வளர்ப்பு, பெரும்கடன்சுமை , ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம்

பொருளாதார ஏற்றத்தாழ்வு! எனப்பல காரணிகள் இருந்தபோதும் குடும்ப உறவுபிரச்சனையே முக்கிய காரணியாகும் .


தமிழர்கள் தமது கணவன் ,மனைவி, குழந்தைகளை அதாவது குடும்ப உறவுகளை தங்களைத்தாங்களே கொலை செய்வது அவமானகரமானதுமட்டுமல்ல என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாததும்கூட!

இனிவரும்காலங்களிலேனும் உணர்ந்து வாழுங்கள் 

கொலை ,தற்கொலைகளை நிறுத்துங்கள் இந்தநாட்டில் வாழமுடியாதவர்களா நீங்கள் ? ஒன்றுமட்டும் உண்மை நீங்கள் எந்த வேற்றுகிரகத்தில்கூட வாழத்தகுதியற்றவர் !

“தீதும் நன்றும் பிறர்தர வாரா“

தீராக்கனலுடன் : தீவகன் 


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள் 

ww.Akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial