இலங்கையில் 5இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் ஆலயம் புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம்!

 



இலங்கையில் 5இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் ஆலயம் புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம்!


புங்குடுதீவின் வரலாற்றுப்பெருமைமிகு கண்ணகி அம்மன் என வழங்கும் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய திருக்குடமுழுக்குவிழா அடுத்த ஆண்டு தமிழுக்கு வைகாசித்திங்கள் ஆங்கிலமாதம் ஆனி 25.06.2023 ம் திகதி வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது .





இந்த பத்தினித்தெய்வம் கண்ணகி மதுரையை எரித்தபின் தென்னிந்தியாவில்இருந்து காவல்தெய்வமான பத்திரகாளி அம்பாள் துணையோடு பேழையில் வந்து புங்குடுதீவின் தென்கடலில் கோரியாவடிபகுதியில் கரையொதுங்கிட, பசுமாடுகள் கடலுக்குள்சென்று சுற்றிவர பாதுகாத்துநிற்க ..! தான் வளர்த்த பட்டி மாடுகளை தேடிச்சென்றவர் தனது பசுக்கள் ஒரு பேழையை சுற்றி நிற்பது கண்டு அதற்குள் பொன்னோ பொருளோ இருக்குமென்றும் , தனக்குப் புதையல் கிடைத்ததகாக எண்ணி கடற்கரையோரம் வீட்டுக்கு தலையில் பேழையை சுமந்தபடி தற்போதைய கண்ணகை புரம்வரைஎடுத்துவருகிறார் . 




வரும்வழியில் பாரம் வர வர அதிகமாகவே இரண்டு இடங்களில் இறக்கி வைக்கிறார் . (இறக்கிவைத்த இவ்விருஇடங்களிலும் 2ஆலயங்கள் அமையப்பெற்றுள்ளன)மீண்டும் தன்பயணத்தை தொடர்கிறார் . 3 வது இடமான தற்போது அமைந்துள்ள இடமான கண்ணகி அம்மன் ஆலயத்தின் தெற்குப்புறம் உள்ள தெற்பக்குளம் அருகே உள்ள பெரிய பூவரசு மரத்தின் அடியில் வைத்து மறுபடி தூக்க முயல்கையில் பேழையை அசைக்கமுடியாது போகவே பேழையைத்திறந்து பார்க்கிறார் அதற்குள் ஒற்றை மார்பகத்தோடு உள்ள கண்ணகி அம்மனும் பத்திரகாளி அம்மன் சிலைகளும் இருக்கக் கண்டு கைகூப்பி வணங்குகிறார்.

பாரம்சுமந்த களைப்பில் அவ்மரத்தடியில் சிறிது ஓய்வுக்காக துண்டைவிரித்து தூங்கிவிடுகிறார். அவரது கனவில் எளுந்தருளி தான் கண்ணகி என்றும் மதுரையில் இருந்து வந்துள்ளேன் எனக்கு இவ்விடத்திலேயே கோவில் எழுப்புவாயாக என்று தெரிவித்துள்ளாள். கற்புக்கரசியான கண்ணகித்தாய் கரைவந்துசேர்ந்த செய்தி புங்குடுதீவெங்கும் காட்டுத்தீபோல் பரவ ஊர்மக்கள் அங்குகூடிடவே அனைத்து மக்களும் கண்ணகிக்கு ஒரு சிறு குடில் அமைத்து வழிபட்டு வரலாயினர் . 

ஒருமுறை பூசை நடைபெறும் நாளொன்றில் ஒரு பெண்ணை வசப்படுத்திய கண்ணகி ,உருக்கொண்டு கலையாடி இங்கு எனக்கு மக்கள் துயர்துடைக்க பெரிய ஆலயம் எழுப்புங்கள் என்று கூறியதும் , ஊர் பெரியவர்களும் கோவில் தர்மகர்த்தாவாகிய திரு இராசரெத்தினம் அவர்களது பேரனாரும் இணைந்து ஊர்மக்களிடம் கோவிலை பெரிதாக கட்ட வீட்டுக்கு சில பனை மரங்களை தந்துதவுமாறு கேட்க்கவே அனைவரும் அன்னையின் அருமை பெருமைகளையறியாது சடுதியாகவே மறுதலித்தனர் . 

மனசு சஞ்சலத்தோடு வீடுதிரும்பிய ஊர் பெரியவர்கள் அன்று இரவு தூக்கத்தில் இருக்கும்போது பேரிடியுடன் பெருமழை பெய்ய புயலென எழுந்து அன்னை தாண்டவமாட, காலையில் ஒவ்வொரு வீட்டிலும் 3-4 பனைமரங்கள் நிலத்திலும் வீதிகளிலும் வீடுகள் மேலும் சரிந்து கிடந்திட .. ஊர்மக்கள் தாமாக எங்கள் வீட்டில் பனைமரம் எடுத்துக்கொள்ளுங்கள் என எல்லோரும் வேண்டுதல் வைக்க மரங்களும் கற்களும் குவிய, பணம்படைத்தோர் பொற்காசுகள் கொடுக்க இந்த ஆலயம் பாண்டிய மன்னன் அரசவையிலே நீதிகேட்டுத் தீயிட்டெரித்த கற்புக்கரசி கண்ணகியாகி புங்கையூர் தென்பதியில் கோவில்கொண்டு எழுந்தருளினாள் .


மதுரையை எரித்த கனலோடு அவள் இருப்பதால் தென்திசையில் இந்துமகாசமுத்திரத்தில் தன் பார்வையை செலுத்தி அமைதிகொண்டபடி இருப்பதே சிறப்பெனக்கருதி இலங்காபுரி மண்ணையும் , லெமூரியா கண்டத்தி்ல் கடற்கோள்கொண்ட முதற்சங்கம் , இடைச்சங்கம் காலத்து மதுரையையும் பார்த்தவண்ணம் அருளாட்சி புரிகிறாள் .

காலப் போக்கில் ஆகம முறைப்படி மூல விக்கிரகமாக ஆதிசக்தியின் வடிவமான அன்னை மகிஷாசுரனை சங்காரம்செய்தபின் எடுத்த அவதாரமான இராஜ இராஜேஸ்வரியாகி புவியனைத்தும் காத்தருளி நிற்கிறாள் .


பின்னொரு நாளில் கட்டுத்தேரில் பவனிவந்த அன்னைக்கு சித்திரத்தேர் கட்டியபோது தேர் வெள்ளோட்டம் செய்வதற்கு முதல்நாள் எந்த இடத்தில் பேழையாக வந்தடைந்தாளோ அதே இடத்தில் தேர் வடக்கயிறு வட்டமாக சுற்றிய படி வந்தடைந்தது ! 

இதுகண்ட ஒருவர் கப்பல் கயிறுபோலும் இதைஎடுத்துச்சென்று யாழ்ப்பாணம் கயிற்றுக்கடையில் விற்றால் நல்ல இலாபம் சம்பாதிக்கலாம் என் எண்ணி கையை வைத்து எடுக்க முற்படுகையில் கருநாகம் கடலலைக்குள் கயிற்றின் வளையத்தினுள் இருந்து சீறியது !

அதுகண்டு நிலைகுலைந்த குடியானவன் கண்ணகித்தாயே ,உனக்கே கொண்டுவந்து தருகிறேன் என்னை மன்னித்துவிடு என்று கைகூப்பி வணங்கியதும் நாகம்மறைந்தது! அதன்பின் இன்றுவரை அதே வடம்கொண்டுதான் அம்பாளின் இரதம் இழுக்கப்படுகிறது. அந்த நாகம் நெடுங்காலமாக தலவிருட்சமான பூவரசமரப் பொந்தில் வாழ்ந்ததாக பலர் கூறக்கேட்டுள்ளோம்.


வெள்ளி இரதம் ஒன்று அம்பாளுக்கு என நேர்ந்து செய்தது ஆழிக்கடலுக்குள் கிடப்பதாகவும் . அது கண்ணகிக்கா ..? அல்லது நயினை நாகபூசணிக்கா..? என அறியாது இரண்டு ஆலயங்களிற்கும் நடுவில் நிற்பதாகவும்,இவ்ஆலயங்களில் வருடாவருடம் நடைபெறும் ஆலயதீர்த்த உற்சவதினம் அன்று ,கடலுக்குள் தீர்த்தமாடும்வேளை வெள்ளித்தேர்முடி கடல் மட்டத்தின்மேல் வந்து இருஅம்பாள்களையும் வணங்கி மீண்டும் ஆழ்கடலுக்குள் செல்வதாகவும் அந்தக்காலத்தில் இருந்து எமது இளமைக்காலம்வரை இரண்டு ஆலயங்களிலும் கடலைநோக்கி பஞ்சாலாத்தி குருக்கள்மாரால் காட்டப்படுவதாகவும், ஊர்ஜிதமில்லாத செவிவழிக்கதையுமுண்டு! 


 புங்குடுதீவின் ஆதிகாலத்தில் 1-12 வட்டார மக்களும் வண்டில் மாடுகட்டி கண்ணகி அம்பாள்மேல் பக்திகொண்டு விரதமிருந்து அம்பாள் ஆலய இரவுபகல் உற்சவங்களில் கலந்துகொண்டு தம்வாழ்வில் சக்தி உபாஷகர்களாகவாழ்ந்து.. கல்வி , செல்வம் , வீரம் என அனைத்திலும் மேன்மையடைந்ததாக கண்ணகி அம்பாளின் பக்தர்கள் சொல்லிச் சொல்லி மகிழ்வர் .


இலங்கையில் நாம் அறிந்தவரை 5 இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் ஆலயம் இதுவென நினைக்கிறேன்.  அந்தப் புண்ணிய பூமியில் அவளது ஆலயநிர்மாணப்பணிகள் பூர்த்தியாகி குடமுழுக்குகாணும் பெரும்பாக்கியம் கைகூடியுள்ளது . 

 லலிதா_லக்ஸ்மணன் 



உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங கை  அழுந்துங்கள் 

ww.Akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial