சிறுவர்களான பிள்ளைகள் இருவர் உட்பட கணவன், மனைவி என நால்வர் உள்ளிட்ட குடும்பம் இன்று காலை வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டமை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 சிறுவர்களான பிள்ளைகள் இருவர் உட்பட கணவன், மனைவி என நால்வர் உள்ளிட்ட குடும்பம் இன்று காலை வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டமை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா, குட்செட் வீதி , அம்மா பகவான் ஒழுங்கையில் பிள்ளைகளும் தாயும் படுக்கையிலும், தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியாப் பொலிஸாருக்குத் தகவல் தெரியப்படுத்தப்பட்டது.





சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதே பகுதியைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது – 42) வீட்டின் விறாந்தைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி (வயது – 36), பிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது – 09), கௌ.கேசரா (வயது – 03) ஆகியோர் உறங்கிய படியும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.





சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியாப் பொலிஸார், மீட்கப்பட்ட சடலங்களை சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் வவுனியாவில் பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial