சிறப்பு பார்வை: நெஞ்சுக்கு நீதி!

 

சிறப்பு பார்வை: நெஞ்சுக்கு நீதி!

சிறப்பு பார்வை: நெஞ்சுக்கு நீதி!

‘ஒரு தவறு செய்தால்... அதைத் தெரிந்து செய்தால்... அது தேவன் என்றாலும் விடமாட்டேன்’ எனும் எம்ஜிஆர் படத்தின் பாடல்வரிகளுக்கேற்ப, அமைச்சர், ஆதிக்கசாதி மனோபாவம் ஆகிய வலிமையான சக்திகளுக்கு எதிராக உறுதியாகப் பேசி உதயநிதி ஸ்டாலினை ஒரு தலைவராக முன்னிறுத்தும் படம் தான் ‘நெஞ்சுக்கு நீதி’.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 15ன் படி, இந்திய குடிமகன்கள் அனைவரும் சமம் அதன் அடிப்படையில் எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு அதனை தடுக்கவோ, மறுக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை திரைக்கதையாக கொண்டு இந்தியில் தயாரிக்கப்பட்ட படம் தான் ஆர்டிக்கிள் 15 படம்.

இந்தபடத்தில் பேசப்பட்ட கருத்துக்கள் இந்திய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்று ஆர்டிக்கிள் 15' படத்தை அப்படியே மறுபதிப்பு செய்யாமல், தமிழகத்தின் அரசியல் சமூக களத்துக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து இயக்கியுள்ளா ர்அருண்ராஜா காமராஜ்.

தமிழ் சினிமாவில் வெளிப்படையாகச் சாதியச் சிக்கல்களைப் பேசுகிற படங்கள் தயாரிப்பதும், அதனை எதிர்ப்பு இன்றி வெளியிடுவதும் இன்றைய சூழலில் எளிதான செயல் இல்லை. சாதியச் சிக்கல்களைப் பேசுகிற படங்களிலும் ஆதிக்கசாதியினர்களை குறியீடாகத்தான் காட்சிப்படுத்தப்படுவார்கள். அந்தப் படங்களிலும் இடைநிலைச் சாதியினர்தான் வில்லன்களாகக் காட்டப்படுவார்கள்.

ஆனால் முதன்முறையாக துணிச்சலாக, இந்தப்படத்தில் முதன்மை வில்லனை ‘அய்யர்’ என்றே சொல்லியிருக்கிறார்கள். பார்ப்பனீயத்தையும் பார்ப்பனர்களையும் நேரடியாக வில்லனாக காட்சிப்படுத்தியிருக்கிறார் அருண் காமராஜ்.

இந்தியில் வெளியான ஆர்டிக்கிள் 15 திரைப்படம் பார்வையாளனுக்கு கொடுத்த அதே உணர்வை தமிழ் 'நெஞ்சுக்கு நீதி' படம் மூலமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர். திருப்பூரில் மேல்சாதிகாரர்கள் எதிர்ப்பு காரணமாக சத்துணவு சமைக்கும் பெண் ஒருவர் பட்டிலியன சாதி என்பதால் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தியது, பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள், கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பெரியார், அம்பேத்கர் சிலைகள், வேல் யாத்திரை போன்ற தமிழகத்தில் சமகாலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் படத்தில் இடம் பெற்றிருப்பது தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.

சாதி ரீதியான வசனங்கள், அரசியல் குறியீடுகள். நேர்மையாக அணுகப்பட்டிருப்பது படத்தின்பலம். குறிப்பாக, காவல்துறையினருக்கிடையே சாதி குறித்து பேசும் வசனங்களும், அந்தக் காட்சியும் தமிழ் சினிமா இதுவரை பதிவு செய்யாதது, மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம், இட ஒதுக்கீடு குறித்த தவறான புரிதல்கள் பற்றி பேசும்படத்தின் வசனங்களில் அனல் பறக்கிறது.

தீ கூட எங்களுக்கு தீட்டாச்சு, எல்லாரும் சமம்னா யார் ராஜா? சமம்னு நெனைக்கிறவன்தான் ராஜா. நடுவுல நிக்கிறது இல்ல சார் நடுநிலை நியாயத்தின் பக்கம் நிக்குறது தான் நடுநிலை.

நம்மல இங்க எரிக்க தாண்டா விடுவாங்க எரிய விடமாட்டாங்க. ஒருத்தன் நல்லவனா இருக்குறதும் கெட்டவனா இருக்குறதும் சாதியில இல்ல குணத்துல இருக்கு. வலியில கத்துனா கூட ஏன் கத்துறன்னு தான் கேப்பாங்களே தவிரஅடிக்கிறவன எதிர்த்து பேசமாட்டாங்க உள்ளிட்ட தமிழரசன் பச்சமுத்துவின் வசனங்கள் தமிழ் சினிமாவிற்கு புதுசு.

சமகால இந்தி மொழி பிரச்சினையும் படத்தில் பதிவாகியிருக்கிறது. படத்தி ல் இறுதிக்காட்சியில் வரும் சிபிஐ அதிகாரியிடம் சாதிய ஆதிக்கம் மோலோங்கி இருப்பதையும், இந்தியிலேயே பேசும் அவருக்கு பதிலடிக் கொடுக்கும் உதயநிதி 'இந்தி கத்துக்குறது ஆர்வம். கத்துக்கணும்னு கட்டாயப்படுத்துறது ஆணவம்' என பேசும் வசனம் தற்போதை அரசியல் சூழலுடன் பொருந்திபோகிறது.வெளிநாட்டில் படித்துவிட்டு இங்குள்ள சாதியச் சிக்கல்களை அறியாத, தீட்டு என்றால் என்னவென்றே தெரியாத காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் உதயநிதி, அந்த வேடத்தின் கனத்தை உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்கிறார்.

அந்த வேடத்துக்கு அவருடைய நடிப்பும் மிகப்பொருத்தம். தீட்டுன்னா என்ன? என்று உதயநிதி கேட்கும்போது, 'தீட்டுன்னா' என சுற்றியிருப்பவர்கள் விழிபிதுங்கி முழிப்பார்கள். அந்தக் காட்சி, காலம் காலமாக பெயர் மங்கிப்போன ஒரு வார்த்தையை பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் சமூகத்தை நோக்கி எழுப்பும் கேள்விகள். உதயநிதியின் மனைவியாக தன்யா ரவிச்சந்திரன், தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவராக ஆரி அர்ஜுனன், அவருடைய இணையாக ஷிவானி ராஜசேகர், காவல்துறையில் பணியாற்றும் இளவரசு, மயில்சாமி உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சுந்தரம் அய்யர் எனும் காவல்துறை ஆய்வாளர் வேடத்தில் நடித்திருக்கும் சுரேஷ்சக்ரவர்த்தி சிறப்பு. படத்துக்கு அவர் பெரிய பலமாக இருக்கிறார். திபு நினன்தாமஸ் இசையில் பாடல்கள் ஆழமான விசயங்களைப் பேசுகின்றன. பின்னணி இசை அளவு.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பொள்ளாச்சியின் அழகையும் அங்கு நிலவும் சாதிக்கொடூரத்தையும் காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழரசன் பச்சமுத்துவின் வசனங்கள் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கின்றன. பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார். அதிலும், எங்க தாத்தா இருந்தா போய்யா மயிறு என்றிருப்பேன் என மயில்சாமி சொல்லும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது

எல்லோரும் சமமென்றால் யார்தான் ராஜா? என்கிற கேள்விக்கு எல்லோரும் சமமென நினைப்பவர்தான் ராஜா என்று படத்தில் தன்யா ரவிச்சந்திரன் சொல்கிறார். உதயநிதிதான் அந்த ராஜா என படம் சொல்லாமல் சொல்கிறது.

இவன் 

Akswisstamilmediateam

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial