சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை – முஸ்லீம் வர்த்தகர் கைது

சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை – முஸ்லீம் வர்த்தகர் கைது
சாவகச்சேரி நகரில் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒரு முஸ்லீம் வர்த்தகர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட போதைப்பொருள் குற்றச்செயல் தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான விசேட குழுவுக்கு, பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற இரகசிய தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில் நேற்று இரவு சாவகச்சேரி நகரின் பிரபல பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, அவர்கள் சாவகச்சேரி நகரில் மரத்தளபாட திருத்தும் கடையை நடத்தும் 45 வயதான முஸ்லீம் வர்த்தகரிடம் இருந்து போதை மாத்திரைகளை பெற்றுக் கொள்கிறார்கள் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று அந்த வர்த்தகர் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் இருந்து 330 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலதிகமாக அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, ஜஸ் (Jaz) என்ற போதைப்பொருளுக்கு ஆட்பட்டவர் என்பது உறுதி செய்யப்பட்டது.

பொலிஸாரிடம் அவர் கூறியதாவது, தான் ஜஸ் போதைக்கு அடிமையாகியுள்ளேன் என்றும், மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்றதில் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி அந்த போதைப்பொருளை வாங்கி பாவித்து வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிகழ்வு, மாணவர்களின் எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்தாக இருப்பதோடு, பள்ளி சூழலில் போதைப்பொருள் பரவலின் தீவிரத்தையும் வெளிக்கொணருகிறது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial