புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயில் பிரச்சனை தொடர்பாக கூட்டம் நடைபெறவில்லை – எதிர்வரும் மாதம் 18ஆம் திகதி இருதரப்பும் அழைக்கப்படும்
புங்குடுதீவு, மே 29:
புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயில் தொடர்பாக நிலவி வரும் பிரச்சனைகள் குறித்து இன்று (29.05.2025) வேலணைப் பிரதேச செயலகத்தில் எந்தவொரு தரப்பினருடனும் சந்திப்போ அல்லது பேச்சுவார்த்தையோ நடத்தப்படவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கோயிலின் தற்போதைய நிர்வாகத் தலைவர் வருகிற ஜூன் 5ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார். அவர் திரும்பிய பின்னர், ஜூலை 18ஆம் திகதி இருதரப்பினரையும் அழைத்து, அதிகாரப்பூர்வ கூட்டம் ஒன்றை நடத்தும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் எமது இணையத்துக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தக் கோயில் பிரச்சனை கடந்த சில மாதங்களாகவே கவனத்தை ஈர்த்து வருவதுடன், சமூகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையிலும் கவலைக்குரிய விடயமாக உள்ளது. சமரசமான மற்றும் சமாதானமான முறையில் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக எதிர்வரும் கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment