இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 5341 குடும்பங்களை சேர்ந்த 18473 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பதுளை , நுவரெலியா ,புத்தளம், காலி, இரத்தினபுரி ,ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேற்குறிப்பிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கனமழை, மின்னல், திடீர் வெள்ளப்பெருக்கு,சுழல்காற்று, மண்சரிவு மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் 1006 குடும்பங்களை சேர்ந்த 3658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் காயமனைந்துள்ளனர் அத்துடன் 5 வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன் 917 வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 167 குடும்பங்களை சேர்ந்த 816 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1 வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 617 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
Post a Comment