இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் இந்திய கடற்படையின் டோர்னியர் விமானம் இன்று (16.08.2023) தரையிறங்கியுள்ளது.
இதன்மூலம் இந்தியாவும் இலங்கையும் தங்கள் உறவுகளை வலுப்படுத்தியதில் ஒரு முக்கிய தருணம் வெளிப்பட்டதாக இந்திய ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.
இதில் தலைமைப் பணியாளர்கள் மற்றும் இலங்கை ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஸ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
Post a Comment