மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்: இராணுவ சிப்பாய் கைது!




மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்: இராணுவ சிப்பாய் கைது!


கண்டி அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


26 வயதுடைய பெண்ணின் சடலம், அவரது வீட்டிற்கு அருகிலுள்ள வயல் நிலத்தின் சதுப்பு நிலத்தில் இருந்து கிராம மக்களால் சனிக்கிழமை (11) மீட்கப்பட்டது.


குறித்த பெண்ணின் கணவர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த வேளையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பொலிஸார் தீவிர விசாரணை

பொலிஸ் நாயின் உதவியுடன் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


உயிரிழந்த பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் சந்தேக நபரின் வீடும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


38 வயதுடைய சந்தேக நபர், முன்னர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்தமையினால், தற்போது இலகுரக கடமைகளில் இராணுவத்தில் பணிபுரிவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


மேலும், உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube




Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial