கடும் நிபந்தனைகளுடன் ஏ.எச்.எம். பௌசிக்கு பிணையில் செல்ல அனுமதி!
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியை, கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு, சுமார் 10 இலட்சம் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியை, 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 100,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில், அவருக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு அமைச்சுக்கு, நெதர்லாந்தினால் வழங்கப்பட்ட மகிழுந்து ஒன்றை, தமது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தி, அரசாங்கத்துக்கு சுமார் 10 இலட்சம் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment