தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் பணியிலிருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, தற்போது நாட்டில் உள்ள விமான நிலையங்களில் பணியாற்ற வேண்டிய 56 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரானந்தா தெரிவித்தார்.
உண்மையில் இலங்கையில் விமான சேவைக்கு குறைந்தது 138 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தேவைப்படுவதாகவும் ஆனால் தற்போது 82 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மாத்திரமே சேவையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு 25 புதிய பட்டதாரிகள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர்கள் தொழில் நிபுணத்துவம் பெறுவதற்கு சுமார் 10 வருடங்கள் ஆகும் எனவும் தலைவர் தெரிவித்தார்.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment